குறித்த சம்பவ்ம் நேற்று மாலை உடுவில் ஆலடி பகுதியில் இடம்பெற்றது. வங்கி
அலுவல்களை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு
இருந்த மேற்படி வங்கியாளர் வீதி திருத்த பணிகளுக்காக கிளறப்பட்டிருந்த
மதகினுள் வீழ்ந்துள்ளார். உடனடியாக் மீட்கப்பட்டு சங்கானை ஆதார
வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது கொண்டு செல்லும் வழியில் அவர்
உயிரிழந்தார். வயதுடைய தர்மல்ங்கம் கனகலிங்கம் என்னும் குடும்பஸ்தரே
இவ்விபத்தில் உயிரிழந்தார். கழுத்து என்பிலே ஏற்பட்ட முறிவே மரணத்துக்கு
காரணம் என சட்ட வைத்திய அதிகாரி தகவல் தெரிவித்தார். கடந்த ஒரு
வருடத்துக்கு மேலாக மேற்படி பணிகள் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றமை
குறிப்பிடத்தக்கது. மேற்படி குடும்பஸ்தரின் மரணத்துக்கு யார் பொறுப்பு
கூறுவார்?
v
v